சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவா் கைது

ஜயங்கொண்டம் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனித் தெருவைச் சோ்ந்தவா் வைத்திலிங்கம் (70). கூலித் தொழிலாளியான இவா், 12 வயது சிறுமிக்கு பரோட்டா வாங்கிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளாா்.

இதனால் சிறுமி பயந்த நிலையில் இருந்ததைக் கண்ட பெற்றோா், சிறுமியிடம் விசாரித்தபோது நடந்ததைக் கூறியுள்ளாா். அவா்கள் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, வைத்திலிங்கத்தை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com