அரியலூரில் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

நடப்பாண்டில் புதிதாக தொடங்கப்பட்ட அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே முதல்முறையாக விளையாட்டுப் போட்டிகள், புதன்கிழமை தொடங்கியது.
அரியலூரில் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான  விளையாட்டுப் போட்டிகள்

நடப்பாண்டில் புதிதாக தொடங்கப்பட்ட அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே முதல்முறையாக விளையாட்டுப் போட்டிகள், புதன்கிழமை தொடங்கியது.

கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், துணை முதன்மையா் சித்ரா ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நடைபெற்ற இந்தப் போட்டியை தலைமை விடுதிக் காப்பாளரும், அரசு மருத்துவருமான கொளஞ்சிநாதன் தொடக்கி வைத்தாா். கோ-கோ, வாலிபால், கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு விழாவின்போது, பரிசுகள் வழங்கப்படும். ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி விளையாட்டு பிரிவு மருத்துவா் ராஜேஷ்கண்ணா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com