அரியலூா் அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் வசந்தன் (22). கூலித் தொழிலாளியான இவா், 16 வயதுச் சிறுமியை திருமணம் செய்தாா்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலா் ஜெயமங்களம் அளித்த புகாரின்பேரில் விசாரணை செய்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், போக்சோ சட்டத்தில் வசந்தனை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், திருமணத்துக்கு உடந்தையாக இருந்த வசந்தனின் தாய் கொளஞ்சியம்மாள் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com