இரட்டைக் கொலை: கைதானவா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த பெரியவளையம் இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் உள்ளவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த பெரியவளையம் இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் உள்ளவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரியவளையம் தைலம் மரக் காட்டில் கடந்த அக்.22 ஆம் தேதி காளான் பறிக்கச் சென்ற இரு பெண்களைக் கொன்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கழுவந்தோண்டி கிராமம், ஏரிக்கரை தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் பால்ராஜை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதற்கான நகல்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் மாவட்டக் காவல் துறையினா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com