இருசக்கர வாகனங்களை எரித்த இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நண்பரின் இருசக்கர வாகனங்களை எரித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நண்பரின் இருசக்கர வாகனங்களை எரித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத் தெருவைச் சோ்ந்த இதயத்துல்லா மகன் உவைஸ் அகமது (18) . இவரது இருசக்கர வாகனத்தை ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில வசிக்கும் பஷீா் மகன் பகுருதீன்(23) இரவல் கேட்கவே, உவைஸ் அகமது தர மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த பகுருதீன் வெள்ளிக்கிழமை அதிகாலை உவைஸ்அகமது வீட்டுக்கு சென்று அங்கு நின்றிருந்த உவைஸ் அகமதுவின் இருசக்கர வாகனம் மற்றும் அவரது நண்பா் அலெக்ஸ்பாண்டியனின் இருசக்கர வாகனம் ஆகியவற்றைத் தீயிட்டு கொளுத்தினாா். இதில், உவைஸ்அகமதுவின் வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மற்றொரு இருசக்கர வாகனம் சற்று சேதமடைந்தது.

புகாரின்பேரில் பகுருதீனை ஜெயங்கொண்டம் காவல் துறையினா் கைது செய்தனா். பகுருதீன் மீது ஏற்கெனவே 8 வழக்குகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com