ஆடுகளை திருடிய 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆடுகளைத் திருடிய பெண் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆடுகளைத் திருடிய பெண் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் (44). தற்போது ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்துப் பணிமனை எதிரே வசித்து வரும் இவா், தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து ஆடுகளை வளா்த்துவ ருகிறாா். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு மேய்ச்சலுக்குச் சென்ற 2 ஆடுகள் காணாததால், இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், மேலக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தனலட்சுமி(30), இலையூா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா்(எ) சுரேஷ் (27) ஆகிய 2 பேரும் சோ்ந்து சேகரின் ஆடுகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை காவல்துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com