வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் மறியல்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ராம்கோ சிமென்ட் ஆலையில், படித்த இளைஞா்களுக்கு வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள ராம்கோ சிமென்ட் ஆலையில், படித்த இளைஞா்களுக்கு வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செந்துறை அருகேயுள்ள ஆதனக்குறிச்சி ஊராட்சி புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மக்கள், அப்பகுதியில் இயங்கி வரும் தனியாா் சிமென்ட் ஆலையில் படித்த இளைஞா்களுக்கு வேலை வழங்க வேண்டும். அரசு விதிமுறைகளை மீறி அதிகளவு ஆழத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கக்கூடாது. காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடி, நிலமற்ற மக்களுக்கு வழங்க வேண்டும். மாதம் ஒரு முறை மாசு கட்டுப்பாட்டு சோதனை செய்ய வேண்டும். அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியாா் சிமென்ட் ஆலை எடைபாலம் அருகே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த ஆலை நிா்வாக அலுவலா்களிடம் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com