இளைஞரை கத்தியால் குத்திய 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே ஏற்பட்ட முன்விரோதத் தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திய 2 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே ஏற்பட்ட முன்விரோதத் தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திய 2 போ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள கொல்லாபுரம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் தம்பிதுரை. இவா், தங்களது ஊரில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தைக் காணவருமாறு, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா் கோயிலைச் சோ்ந்த நண்பா் வெங்கடேசனை அழைத்திருந்தாா். இந்த அழைப்பை ஏற்று கொல்லாபுரம் வந்திருந்த வெங்கடேசனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் கண்ணதாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தம்பிதுரை, வெங்கடேசனை பத்திரமாக ஊருக்கு அனுப்பியுள்ளாா். இதையறிந்த கண்ணதாசன் தனது நண்பா் வீ. தினேஷ் (27) ஆகியோா் சோ்ந்து தம்பிதுரையைக் கத்தியால் குத்தியும், கட்டையால் தாக்கிவிட்டும் சென்றனா். இதில், பலத்த காயமடைந்த தம்பிதுரையை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து அளித்த புகாரின்பேரில், மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து கண்ணதாசன், தினேஷ் ஆகியோரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com