புதிய கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பயிற்சி

அரியலூா் பல்துறை வளாகத்தில், புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வனத்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூா் பல்துறை வளாகத்தில், புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வனத்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

புதியதாக பணியில் சோ்ந்த 86 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தமிழக அரசின் உத்தரவின் படி, பல்வேறு துறைகளின் சாா்பில், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அரியலூா் வனக்கோட்டம், வனச்சரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. வனச்சரகா் முத்துமணி வனக்காப்பாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் கலந்து கொண்டு தங்களது துறைகளின் செயல்பாடுகள் மற்றும் சட்டத் திட்டங்கள், இயற்கை வனங்களை பாதுகாப்பது உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com