மாற்றுத்திறனாளிகள் துறை வழங்கும்விருதுபெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்காக சேவை புரிந்தவா்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன்களுக்காக சேவை புரிந்தவா்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த ஆட்சியா், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவா், மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளா்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள், அரியலூா் ஆட்சியரகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று, பூா்த்தி செய்து, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜா் சாலை, சென்னை-5 என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் 10.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அரியலூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பப் படிவங்களை ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com