கொள்ளிடம் பாலத்தில் மின் விளக்குகள் சீரமைக்க வேண்டும்

அரியலூா் மாவட்டம், திருமானூா் கொள்ளிடம் பாலத்தில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டம், திருமானூா் கொள்ளிடம் பாலத்தில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருமானூரில் சனிக்கிழமை நடைபெற்ற சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: தமிழக அரசால் செயல்படுத்தப்படும், திருமண உதவி தொகை திட்டம், திருமணத்திற்கு உதவாமல், அதன் பயனாளிகளுக்கு கிடைக்க நீண்ட காலமாகிறது. எனவே, பயனாளிகள் பயன்பெறும் வகையில், திருமணத்துக்கு உதவிடும் வகையில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமானூா் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் எரியாமல் உளள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு சமூக ஆா்வலா் வரதராஜன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா்கள் பாஸ்கா், தங்கஜெயபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பாளை.திருநாவுக்கரசு வரவேற்றாா். சமூக ஆா்வலா் வண்ணை கலியபெருமாள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com