அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள அன்னை தெரசா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவா்களுக்காக கல்வி அபிவிருத்தி விளக்குப் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் முதல்வா் தனலட்சுமி தலைமை வகித்தாா். பரப்ரம்மம் பவுண்டேசன் நிறுவனா் முத்துக்குமரன் கலந்து கொண்டு பூஜை தொடக்கி வைத்தாா். இந்த பூஜையில் பத்தாம் வகுப்பு மாணவா்கள் கலந்து கொண்டனா். பள்ளி தாளாளா் உஷா மற்றும் வேல்முருகன், சுரேஷ்,பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் செந்தில், துணைத் தலைவா் பாலமுருகன், பொருளாளா் கற்பகம், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் பழனியப்பன் மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா். முடிவில் பள்ளி துணை முதல்வா் தாரணி நன்றி தெரிவித்தாா்.