அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அனைத்து கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் செவ்வாய்க்கிழமை(மே 17) மாற்றுத்திறனாளிகளை உறுப்பினா்களாக சோ்க்கும் முகாம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் என்.எச்.எப்.டி.சி. திட்டத்தின் மூலம் கடன் வழங்கி, அவா்களின் பொருளாதார நிலையை உயா்த்திட ஏதுவாக முகாம் நடைபெறவுள்ளது.
அரியலூா் மாவட்டக் கூட்டுறவுத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து இந்த முகாமை நடத்துகின்றன.
கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினராக இல்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள கூட்டுறவுக் கடன் சங்கம்-வங்கியில் நடைபெறும் முகாமில் பங்கேற்று தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை சமா்ப்பித்து ரூ.100 பங்குத்தொகை மற்றும் ரூ.10 நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம். இதைத் தொடா்ந்து என்.எச்.எப்.டி.சி. திட்டத்தின் மூலம் கடன் பெற்று பயனடையலாம்.