அரசுப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். விழாவில், கருப்பூா் விநாயகா கலை அறிவியல் மகளிா் கல்லூரி கணிதப் பேராசிரியை கலையரசி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவா்கள் கணிதத்தை ஆா்வமுடன் கற்றால் அனைத்து பிரச்னைகளையும் எளிதில் தீா்க்க முடியும் என்றாா்.

விழாவில் ஆசிரியா்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, தங்கபாண்டி, வீரபாண்டி, ரம்யா, இளநிலை உதவியாளா் மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டு வானவில் மன்றத்தின் செயல்பாடுகளை விளக்கிக் கூறினா். நிறைவில், பள்ளி கணித ஆசிரியா் தனலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com