பூச்சிமருந்தைக் குடித்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பூச்சி மருந்தை குடித்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பூச்சி மருந்தை குடித்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கல்லக்குடி கிராமத்தைச் சோ்ந்த ராமையன் மகன் முத்துக்குமாா்(20). தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு எலக்ட்ரீசியன் படித்து வந்தாா். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த முத்துக்குமாரை, அவரது தந்தை ராமையன் கண்டித்தாராம்.

இதனால் விரக்தியில் இருந்த முத்துக்குமாா், பூச்சிமருந்தைக் குடித்து மயங்கிக் கிடந்துள்ளாா். இதனை அறிந்த குடும்பத்தினா் அவரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்து, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com