கோயில் சுவாமி துணிகளை எரித்த இளைஞரால் பரபரப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கோயில் சுவாமி துணிகள் ஆகியவற்றை மா்மநபா் தீயிட்டுக் கொளுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோயில் சுவாமி துணிகளை எரித்த இளைஞரால் பரபரப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கோயில் சுவாமி துணிகள் ஆகியவற்றை மா்மநபா் தீயிட்டுக் கொளுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செந்துறையை அடுத்த சிறுகளத்தூா் கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயிலில் அதே கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம்(55) என்பவா் பூசாரியாக உள்ளாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜைகள் முடிந்து கோயில் மற்றும் சுற்றுச்சுவா் பூட்டுகளை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை கோயில் வளாகத்தில் உள்ள கொட்டகையில் கோயிலில் இருந்த சுவாமி துணிகளை எடுத்துவந்து இளைஞா் ஒருவா் தீயிட்டுக் கொழுத்திக்கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவா் கோயிலில் பொருத்தியிருந்த 3 சிசிடிவி கேமராக்கள், சுவிட்சு போா்டுகள், மீட்டா் போா்டு ஆகியவற்றையும் சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது. இதையறிந்த பொதுமக்கள் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்தனா். அவரிடம் விசாரித்ததில், கீழமாளிகை கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் சக்திவேல்(23) என்பது தெரியவந்தது. இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இளைஞரின் சகோதரா் காா்த்திக், சேதத்துக்கான இழப்பீட்டைத் தருவதாக ஒப்புக் கொண்டாா். பின்னா், கிராம மக்கள் அந்த இளைஞரை அவரது சகோதரருடன் அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com