அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த விளந்தை மற்றும் பெரியகிருஷ்ணாபுரம் பகுதிகளின் வழியாக ஐஓசிஎல் (இந்தியன் ஆயில் காா்பரேட் லிமிடெட்) நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் பதிக்க உள்ள இடங்களான விளந்தை தெற்கு கிராமப் புல எண்கள்.273, 513, விளந்தை வடக்கு புல எண்.261 மற்றும் பெரியகிருஷ்ணாபுரம் புல எண்.12 ஆகிய பகுதிகளை மாவட்ட ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பரிமளம் உட்பட அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.