அரியலூா் நகரில் ஆவின் பாலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சாா்பில் செந்துறை சாலையில் அழகப்பா முதல் தெருவில் நடைபெற்ற ஆவின் பாலகம் திறப்பு விழாவுக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ம. தீபா சங்கரி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி வைத்து முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா். அப்போது, ஆவின் மூலம் விற்கப்படும் தரமான உணவுப் பொருள்களை பொதுமக்கள் வாங்கிப் பயன்பெறலாம் என்றாா்.
விழாவில், சரக துணைப் பதிவாளா் ஆா்.ஜெயராமன், துணைப் பதிவாளா் த.அறப்பள்ளி, மேலாண்மை இயக்குநா் ஆா்.பழனியப்பன், சங்கத் தலைவா் எம்.வேலுசாமி மற்றும் சாா்பதிவாளா்கள், சங்கத்தின் பொது மேலாளா்கள், துணைத் தலைவா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.