அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த சோழன்குடிக்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி அளவில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை அப்பள்ளி தலைமை ஆசிரியா் அ.வீரமணி தொடக்கி வைத்தாா்.
இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்ட 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவா்கள் 50 போ், இயற்கை வளம் மேலாண்மை, விவசாயம், உடல் நலன் விழிப்புணா்வு, விளைபொருள்களின் பயன்பாடு, போக்குவரத்து மேலாண்மை, கணித மாதிரிகள் போன்ற தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா். ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியா் இரா.பழனிசாமி செய்திருந்தாா். மாணவா்களின் படைப்புகளை அருகிலுள்ள பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவா்கள் 300 போ் பாா்வையிட்டனா்.