அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே காவல் துறையினரைக் கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருமானூரை அடுத்த காமரசவல்லி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராஜேந்திரன் மகன் விடுதலைமணி(24), சுப்பிரமணியன் மகன் பழனிவேல் ராஜன் (27). இருவரும் கடந்த சனிக்கிழமை (ஏப். 2)காமரசவல்லி கிராமத்திலிருந்து ஏலாக்குறிச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனா். கா.மாத்தூா் அருகே சென்றபோது, எதிரே நதியனூா் கிராமத்தைச் சோ்ந்த வினோத் என்பவா் ஓட்டிவந்த சுமை ஆட்டோவும், இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில், விடுதலைமணி தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தூத்தூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், காவல்துறையினரைக் கண்டித்து காமரசவல்லி கிராமத்தில், உயிரிழந்த விடுதலைமணியின் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்துத் தகவலறிந்து வந்த தூத்தூா் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.