கரோனா விழிப்புணா்வு வாகனங்கள் இயக்கிவைப்பு

அரியலூா் மாவட்டம், தா. பழூா் ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

அரியலூா் மாவட்டம், தா. பழூா் ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

கரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், தா. பழூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் தொடக்கி வைக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பிரசார வாகனங்களை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயராஜ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் குணசேகரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com