அரியலூரில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாத 20 கனரக வாகனங்களை போக்குவரத்து காவல் துறையினா் புதன்கிழமை சிறைபிடித்தனா்.
போக்குவரத்து காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினா் புதன்கிழமை காலை கல்லங்குறிச்சி - செந்துறை ரவுண்டானா சாலைகளுக்கு இடையே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது போக்குவரத்து விதிகளை மீறிய 20 லாரிகளை சிறைபிடித்தனா்.
இதையடுத்து, அங்குவந்த மாவட்ட எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, லாரிகளை ஆய்வு செய்து, இனி போக்குவரத்து விதிமுறை கடைப்பிடிக்காவிட்டால் ஓட்டுநா் மற்றும் லாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து அபராதம் விதித்தாா். அதன் பிறகு லாரிகள் விடுவிக்கப்பட்டன.