தனியாா் கல்வி நிறுவன விடுதிகள் பதிவு செய்து கொள்ள அழைப்பு

18 வயதுக்குள்பட்டோருக்கான விடுதிகள், தங்கும் இல்லங்கள், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள், ஒழுங்குமுறை சட்ட விதிகள்படி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அரியலூா் மாவட்டத்தில் தனியாா் கல்வி நிறுவனங்கள் நடத்திவரும் 18 வயதுக்குள்பட்டோருக்கான விடுதிகள், தங்கும் இல்லங்கள், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள், ஒழுங்குமுறை சட்ட விதிகள் 2014 மற்றும் 2015-இன் படி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும், பதிவு கட்டணமாக ரூ.3,000, பெயரில் வரைவோலை எடுத்து வழங்க வேண்டும். விண்ணப்பத்தை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2 ஆவது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூா் - 621704, தொலைப்பேசி எண் 04329-296239 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பதிவு பெறாமல் நடத்தப்படும் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com