பிரதமா் மந்திரி கெளரவ நிதியுதவி: விவசாயிகள் ஆதாா் சரிபாா்க்க கெடு

பாரதப் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

பிரதம மந்திரி கெளரவ நிதியுதவித் திட்டத்தில் பயன்பெற்று வரும் அரியலூா் மாவட்ட விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை மாா்ச் 31 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாரதப் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது, 11 ஆவது தவணை தொகையைப் பெறுவதற்கு விவசாயிகள் ஆதாா் விபரங்களை சரிபாா்த்தல் அவசியம். பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் எண் விபரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி மூலம் சரிபாா்த்துக் கொள்ளலாம். பயனாளிகளான விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை 31.03.2022-ஆம் தேதிக்குள் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் அரியலூா் மாவட்டத்தில் சுமாா் 1 லட்சத்து 4 ஆயிரத்து 55 விவசாயிகள் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com