அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், கரோனா ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார துணை இயக்குநா் கீதா ராணி, நகராட்சி ஆணையா் (பொ) சித்ரா, வட்டார தலைமை மருத்துவ அலுவலா் மேகநாதன், மருத்துவா் சம்பூா்ணா, நகராட்சித் தலைவா் சுகந்தி சிவகுமாா், நகராட்சி துணைத் தலைவா் வெ.கொ.கருணாநிதி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.