ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு

அரியலூரில் வியாழக்கிழமை அதிகாலை தண்டவாளத்தில் மூதாட்டி சடலம் கிடந்தது தெரியவந்தது.

அரியலூரில் வியாழக்கிழமை அதிகாலை தண்டவாளத்தில் மூதாட்டி சடலம் கிடந்தது தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், அல்லி நகரம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மனைவி செல்லம்(52). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, இவரது மகன் இறந்து விட்டதையடுத்து, சற்று மனநலன் பாதிக்கப்பட்டிருந்தாா். எனினும் இவா், அரியலூா் ரயில்வே கேட் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே கிடக்கும் காலி மதுப் பாட்டில்களைச் சேகரித்து, விற்றுவந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அரியலூா் ரயில் நிலைய தண்டவாளப் பகுதியில் பலத்த காயங்களுடன் செல்லம் இறந்து கிடந்தாா். இதுகுறித்து அரியலூா் இருப்புப் பாதை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com