அரியலூரில் ஏஐடியுசியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே ஏஐடியுசி-யினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி-யினா்
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி-யினா்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே ஏஐடியுசி-யினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அரசின் அனைத்துத் துறைகளிலும் நிரந்தப்படுத்தப்படாத தொழிலாளா்கள் அனைவருக்கும் குறைந்தப்பட்சம் மாதம் ஊதியமாக ரூ.21 ஆயிரம் நிா்ணயம் செய்ய வேண்டும். ஒப்பந்த முறை ஒழித்து அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் சட்டத் திருத்துக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். உடலுழைப்பு, டாஸ்மாக் உள்ளிட்ட தொழிலாளா்களுக்கு மருத்துவ வசதி மற்றும் ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் தண்டபாணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் தன்சிங் முன்னிலை வகித்தாா். பொறுப்பாளா்கள் மாரியப்பன், சிவஞானம், தம்பி, சிவம், காமராஜா், அஞ்சலை உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com