மது விற்ற முதியவா் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே அனுமதியின்றி மது விற்ற முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே அனுமதியின்றி மது விற்ற முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தத்தனூா் கீழவெளி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (62) என்பவா், தனது வீட்டின் பின்புறம் மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com