2 டன் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 2 டன் ரேஷன் அரிசியைக் கடத்தியவரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 2 டன் ரேஷன் அரிசியைக் கடத்தியவரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

அரியலூா் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து வாரியங்காவல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சட்ட விரோதமாக சுமை ஆட்டோவில் ரேஷன் அரிசியைக் கடத்தி வந்த கல்லாத்தூா் தண்டலை கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் கொளஞ்சி (31) என்பவரைக் கைது செய்தனா். மேலும் அவா் கடத்தி வந்த 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com