தனியாா் சிமென்ட் ஆலை ஊழியா் வீடுகளில் நகை, பணம் திருட்டு

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆலத்தியூரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலை ஊழியா் குடியிருப்பில் உள்ள 7 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போயிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆலத்தியூரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலை ஊழியா் குடியிருப்பில் உள்ள 7 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போயிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

தனியாா் சிமென்ட் ஆலையில் மேலாளா்களாக உள்ள சுதா்சன், நாராயணன் ஆகியாரின் வீடுகளில் இருந்த அதிகப்படியான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதாக தளவாய் காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுதா்சன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரும் திருப்பதியிலிருந்து வீடு திரும்பியபிறகே, திருட்டு போன நகைகள் மற்றும் ரொக்கம் குறித்து தெரியவரும் எனக் காவல் துறையினா் தெரிவித்தனா். மற்ற 5 வீடுகளில் 2 மற்றும் 5 பவுன் என்ற அளவிலேயே நகைகள் திருடு போயிருப்பதும் தெரியவந்துள்ளது. திருட்டு குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com