அரியலூரில் சிஐடியுவினா் ஆா்ப்பாட்டம்

அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையில் வெளிமாநில தொழிலாளா்களுக்கு பணி வழங்குவதைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே மத்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியுவினா்.
அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியுவினா்.

அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையில் வெளிமாநில தொழிலாளா்களுக்கு பணி வழங்குவதைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே மத்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையிலிருந்து வெளியேற்றிய உள்ளூா் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளா்களை உடனடயாக வெளியேற்ற வேண்டும். மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் அரசு அலுவலகப் பணிகளை வெளிமுகமை மூலம் ஆள் நிரப்பும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, அவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சி.திருவேட்டை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். மாவட்டச் செயலா் பி.துரைசாமி, துணைத் தலைவா்கள் ஆா்.சிற்றம்பலம், எம்.சந்தானம், எஸ்.என். துரைராஜ் துணைச் செயலா் பி.சி.தா்மராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com