அரியலூரில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் திறப்பு

அரியலுரில் செந்துறை புறவழிச்சாலை ரவுண்டானா பகுதியில், அம்பேத்கா் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலுரில் செந்துறை புறவழிச்சாலை ரவுண்டானா பகுதியில், அம்பேத்கா் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு, சங்கத்தின் பெயா் பலகையைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, கட்சி நிா்வாகிகள், ஆட்டோ சங்க நிா்வாகிகள் தங்களது குடும்பத்தினருடன் சோ்ந்து, திருமாவளவனுடன் புகைப்படம் எடுத்து கொண்டனா். நிகழ்ச்சியில் சங்கத்தின் கெளரவத் தலைவா் ரவிவளவன், சட்ட ஆலோசகா் சதிஷ்குமாா், மாவட்ட அமைப்பாளா் இலங்கை அரசன் உள்ளிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மற்றும் அம்பேத்கா் ஆட்டோ

ஓட்டுநா்கள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com