அரியலூரில் முதல்வா் கோப்பை போட்டிகள்: பங்கேற்க அழைப்பு நாளைக்குள் பதியலாம்

அரியலூரில் நடைபெறவுள்ள முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜன.29) தங்களது பெயரை இணையம் வழியாகப் பதியலாம்.

அரியலூரில் நடைபெறவுள்ள முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜன.29) தங்களது பெயரை இணையம் வழியாகப் பதியலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்தது:

வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பாக 5 பிரிவுகளில் இப்போட்டி அரியலூரில் நடத்தப்பட உள்ளது.

கல்லூரிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுப்பிரிவுகளில் அரியலூா் மாவட்டத்தில் பதிவுகள் மிகவும் குறைவாக உள்ளது. அரசு ஊழியா்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றுவோா் ஒன்று சோ்ந்து ஒரு அணியாகப் பங்கேற்க இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ந. லெனினை 74017034 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com