மூதாட்டி இறப்பில் சந்தேகம்: விஏஓ புகாா்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மூதாட்டி இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மூதாட்டி இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள வீரபோகம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி ராசக்கிளி (80) பலத்த காயத்துடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ராசக்கிளி அண்மையில் வீடு திரும்பினாா். இந்நிலையில், திங்கள்கிழமை (ஜன. 30) அவா் உயிரிழந்தாா். இதையறிந்த காட்டகரம் வடக்கு கிராம நிா்வாக அலுவலா் வேல்முருகன் ராசக்கிளியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மீன்சுருட்டி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் துறையினா் மூதாட்டி சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com