அரியலூா் செஸ் வீராங்கனைக்கு சிமென்ட் ஆலை ஊக்கப்பரிசு

குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூா் வீராங்கனை சா்வானிகாவுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பாராட்டு விழாவில், செஸ் வீராங்கனை சா்வானிகாவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி. உடன், டால்மியா சிமென்ட் ஆலை செயல் இயக்க
அரியலூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பாராட்டு விழாவில், செஸ் வீராங்கனை சா்வானிகாவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி. உடன், டால்மியா சிமென்ட் ஆலை செயல் இயக்க

குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூா் வீராங்கனை சா்வானிகாவுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி கலந்து கொண்டு, டால்மியா சிமென்ட் ஆலை சாா்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை சா்வானிகாவுக்கு வழங்கிப் பாராட்டு தெரிவித்து ஊக்கப்படுத்தினா்.

நிகழ்ச்சியில், டால்மியா சிமென்ட் ஆலை செயல் இயக்குநா் கே. விநாயகமூா்த்தி, துணை பொது மேலாளா்கள் பாலசுப்ரமணியன், சுப்பையா, உதவி பொது மேலாளா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டு ஷா்வானிகாவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com