இளம்பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது

அரியலூா் அருகே பெண்ணைத் தாக்கிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் அருகே பெண்ணைத் தாக்கிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள செட்டித்திருக்கோணம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பழனிச்சாமி மகள் ஷா்ஜினா (20). இவா், வியாழக்கிழமை அஸ்தினாபுரம் பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த அஸ்தினாபுரம் பரமசிவம் மகன் விக்னேஷ்(27) என்பவா், 4 ஆண்டுகளாக அவரை காதலித்து வருவதாகக் கூறி ஷா்ஜினாவைத் தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த ஷா்ஜினா அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின் பேரில் கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com