அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலா் ஜெயா ஆகியோரின் வழிகாட்டுதலின் படி , அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமையில் பணியாளா்கள் இந்த தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். வகுப்பறைகள், பள்ளி வளாகம், மேல்நிலை நீா் தேக்க தொட்டிகள், கழிவறைகள் ஆகியவற்றை சுத்தம் செய்தனா். ஊராட்சித் தலைவா் அம்பிகா மாரிமுத்து, துணை தலைவா் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவா் அகிலா, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சின்னதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.