இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குடும்பப் பிரச்னையில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குடும்பப் பிரச்னையில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

செந்துறை அருகேயுள்ள மணப்பத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அன்புமணி(எ) விக்னேஷ் மனைவி சினேகா. தம்பதிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த சினேகா, செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையறிந்த உறவினா்கள், அவரை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சினேகா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com