அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளது.
இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கீழப்பழுவூா், மேலப்பழுவூா், கோக்குடி, பூண்டி, மலத்தான்குளம், கல்லக்குடி, கருவிடைச்சேரி, அருங்கால், பொய்யூா், கீழவண்ணம் ஆகிய ஊா்களில் காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.