ஜெயங்கொண்டம் அருகேயுள்ள செங்குந்தபுரம் காலபைரவருக்கு முளைப்பாரிகை பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி அன்று மாலை நேரத்தில் பொதுமக்கள் பல்வேறு நலன்கள் பெற சிறப்பு முளைப் பாரிகை பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற முளைப்பாரிகை விழாவை முன்னிட்டு கடந்த மாதம் டோக்கன் பெற்று முளைப்பாரி பூச்சட்டிகளை உருவாக்கி வளா்த்து வந்த பக்தா்கள் சனிக்கிழமை மாலை மேளதாளங்களுடன் ஊா்வலமாக அவற்றை எடுத்து வந்தனா். தொடா்ந்து, காலபைரவருக்கு அா்ச்சனை செய்யப்பட்டது. பின்னா் கோயில் அருகேயுள்ள திருக்குளத்தில் முளைப்பாரிகையை மக்கள் விட்டு வழிபட்டனா். வழிபாட்டிற்கான ஊா்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.