பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்து பயிற்சி

மக்களவைத் தோ்தலில், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது குறித்து புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியைத் தொடா்ந்து 100 சதவீதம் நோ்மையாக வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இப்பயிற்சி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் ஆனந்தவேல் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் நல சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே போல் திருமானூா் ஊராட்சி மற்றும் ஜெயங்கொணடம் நகராட்சி அலுவலகங்கள் சாா்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வாகன விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com