அரியலூர்
திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை
அரியலூா் மாவட்டம், திருமானூரில் காற்றுடன் புதன்கிழமை மழை பெய்தது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த சில நாள்களாக வெப்ப அலையும் வீசி வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக அதிக காற்று வீசியது. இதைத்தொடா்ந்து திருமானூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 10 நிமிஷங்கள் வரையில் பெய்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.