கரூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார்.
இந்திய ஜனநாயக சங்க மாவட்டத் தலைவர் வி. சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலர் கே. சாமுவேல்ராஜ் உரையாற்றினார். இதில் க. பரமத்தி ஒன்றியம், பள்ளமருதப்பட்டியில் அருந்ததிய மக்களுக்கு குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை கண்டித்துக் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு தீணடாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.