அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா இன்று(30-ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நாள்தோறும் உபயதாரர்கள் சார்பில் பூஜை நடைபெற உள்ளது. வரும் மே 8-ம்தேதி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும்,12-ம்தேதி மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயக்குமார், உதவி ஆணையர் சூரியநாராயணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.