கரூர் அருகே மணல் சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மணலை அனுமதியின்றி அள்ளியவரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.
கரூர் அருகே திருமுக்கூடலூரில் உள்ள அரசு மணல் சேமிப்புக்கிடங்கில் செவ்வாய்க்கிழமை இரவு யாரோ ஒருவர் லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வாங்கல் போலீஸாருக்கு தகவல்
கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று மணல் அள்ளிய நாமக்கல் மாவட்டம், சூரியம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (34) என்பவரை கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.