சிந்தாமணிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த இஞ்சிகிணத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சக்திவேல் (30). இவர் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில், கரூர் மாவட்டம், கடவூரில் வசிக்கும் தனது நண்பரை சந்தித்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
பாளையம்-மைலம்பட்டி சாலையில் குருணிகுளத்துப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது நிலைத்தடுமாறி இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.