அரவக்குறிச்சி ஒன்றியம், புங்கம்பாபாடி மேல்பாகம் ஊராட்சிக்குட்பட்ட கணக்கு வேலம்பட்டியில் கடந்த மூன்று மாத காலமாக தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் திங்கட்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கணக்கு வேலம்பட்டியில் கடந்த மூன்று மாத காலமாக ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகிக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் இரண்டு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.