குளித்தலையில் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், தென்னூர் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (34). இவர், புதன்கிழமை தனது பைக்கில் திருச்சி வந்துவிட்டு பின்னர் திருப்பூருக்கு திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை கடம்பர் கோயில் அருகே சென்றபோது, திடீரென பைக் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.