நிகழாண்டு 240 நாட்டுக்கோழி பண்ணை அமைக்க இலக்கு

கரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 240 நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 240 நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
  கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு கோழி அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்திற்கு நிகழாண்டில் 240 நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்றபெற விவசாயிகள், தனிநபர் தொழில்முனைவோர், சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் தகுதியானவர்கள். கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் விண்ணப்பதாரர் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும். மேலும் கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், ஆர்வம் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
பயனாளிகள் தங்கள் சொந்த முதலீட்டில் அல்லது வங்கி மூலம் கடன் பெற்று இத்திட்டத்தில் கோழிப்பண்ணை அமைக்கலாம். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் மூன்று நாள்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் வங்கியில் இருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன் விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com