கரூர் மாவட்டக் காவல்துறையில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வரும் மணிகிருஷ்ணனுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தி.கி. ராஜசேகரன் பாராட்டு தெரிவித்தார்.
கரூர் மாவட்டக் காவல்துறையில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி, திருச்சி மாவட்டத்துக்கு முதுநிலை புகைப்படக் கலைஞராகப் பதவி உயர்வில் செல்லும் மணிகிருஷ்ணனின் பணியைப் பாராட்டி காவல் கண்காணிப்பாளர் தி.கி. ராஜசேகரன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்வில் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.பி.எஸ்.ஜெயச்சந்திரன், மாவட்டத் தனிப்பிரிவு ஆய்வாளர் ஜெ.அருள்மொழிஅரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.